பல்லவி
இந்தகன்ன தெல்ப தரமா
ஜக3தீ3ஸ்1வர நே நீகிதரமா 1நீதோ (இ)
சரணம்
சரணம் 1
நீடி லோனி 2ராஜீவமுரா ராம
நின்னு நம்மி ப்3ரதுகு 3ஜீவமுரா (இ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இந்தகன்ன/ தெல்ப/ தரமா/
இதைவிட/ தெரிவிக்க/ இயலுமா/
ஜக3த்/-ஈஸ்1வர/ நே/ நீகு/-இதரமா/ நீதோ/ (இ)
பல்லுகிற்கும்/ ஈசனே/ நான்/ உனக்கு/ அயலா/ உன்னிடம்/ இதைவிட...
சரணம்
சரணம் 1
நீடி லோனி/ ராஜீவமுரா/ ராம/
நீரினுள்/ மீனய்யா/ இராமா/
நின்னு/ நம்மி/ ப்3ரதுகு/ ஜீவமுரா/ (இ)
உன்னை/ நம்பி/ பிழைக்கும்/ சீவனய்யா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நீதோ - நாதோ : இவ்விடத்தில் 'நாதோ' என்பது பொருந்தாது.
5 - கருணே - கருண : இதே சரணத்தின் அடுத்த வரியில் வரும் 'மயமே' என்ற சொல்லினைக் கருத்தில் கொண்டு, 'கருணே' ஏற்கப்பட்டது.
7 - மயமே - மாயமே : இவ்விடத்தில் 'மயமே' என்பதுதான் பொருந்தும்.
8 - மூர்தி - கீர்தி : மூர்தே - கீர்தே : மூர்தி - கீர்தி என்பதே பொருந்தும்.
Top
மேற்கோள்கள்
4 - சாதகமு - சாதகப் பறவை மழை நீரைத்தான் குடிக்குமாம். எனவே அது நீர்முகிலினை எதிர்நோக்கியருப்பதாகக் கூறப்படும்.
6 - ராஜ யோக3மு - ராஜ யோகம் - பெரும் பேற்றினைக் குறிக்கும். கோள்களின் குறிப்பிட்ட சேர்க்கைக்கு இந்தப் பெயராகும். அவ்வமயம் பிறந்தவன், பெரும் பெயரும் புகழும் அடைவான் என தமிழ் அகராதி கூறும். அவ்வமயம் பிறந்தவன், அரசனாவான் என்று சம்ஸ்கிருத அகராதி கூறும். – ராஜ யோகம் பற்றி மேற்கொண்டு விவரங்களறிய.
Top
விளக்கம்
2 - ராஜீவமு - இச்சொல், தாமரை மலரையும், ஒருவித மீனையும் குறிக்கும். பிற சரணங்களில் தியாகராஜர் கூறியவற்றையும் சேர்த்து நோக்குகையில், இவ்விடத்தில், 'மீன்' என்ற பொருளே பொருந்தும். ஏனெனில், நீரில்லாது மீன் உயிர் வாழ இயலாது. தாமரை மலரும் நீரில்லாது வாடிப்போகும். ஆனால் மீன், நீரில்லாது நிமிடமும் உயிர் வாழாது.
3 - ஜீவமுரா - இவ்விடத்தில், 'சீவான்மா' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
7 - நீ மயமே - உன்மயம் - 'தன்மயம்' எனப்படும் வழிபடும் பொருளினில் ஒன்றுதல்
இரவரசன் - மதி
Top